தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சி

தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சி
கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க முயற்சித்துள்ளனர். சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது மீட்கப்பட்ட செய்மதி தொலைபேசிகளின் ஊடாக இந்தத் திட்டம் அம்பலமாகியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையை, மகசீன் சிறைக்கு அழைத்து சந்திப்பதற்கு கைதிகள் முயற்சித்துள்ளனர். புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து 18 செய்மதித்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. புதிய மகசீன் சிறையில் 300 புலிக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நவனீதம்பிள்ளையின் அழுத்தங்களின் ஊடாக விடுதலையாகும் நோக்கில் இவ்வாறு முயற்சித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.