இந்தியா – சிறிலங்கா – சீனா: உக்கிரமடையும் ராஜதந்திர போர்

இந்தியா – சிறிலங்கா – சீனா: உக்கிரமடையும் ராஜதந்திர போர்

சிறிலங்கா இராணுவத்தினருக்கான பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுக்கு பயிற்சிகளுக்காகச் செல்லும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இதனால் பயிற்சிகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்களும், உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுவதாக சிறிலங்கா அரசு எண்ணுகிறது.

இதனால், பாதுகாப்பு அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கவும் சிறிலங்கா அரசு உத்தேசித்திருப்பதாக அறியமுடிகின்றது.

இந்தியாவில் வெலிங்ரனில் பாதுகாப்புச் சேவைகள் உத்தியோகத்தர் பயிற்சிநெறியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சிறிலங்காவைச் சேர்ந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை வேறு பயிற்சி நிறுவனத்துக்கு மாற்ற இந்தியா கேட்டபோதும் அந்தக் கோரிக்கையை சிறிலங்கா மறுத்துள்ளது.

தமிழ் நாட்டில் தமக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக் காரணமாக இந்த இரண்டு அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்யாமல் சிறிலங்கா திரும்பினர்.

பாதுகாப்பு காரணமாக இந்த இரண்டு அதிகாரிகளையும் ஆந்திர பிரதேசத்திலுள்ள உயர் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றுக்கு மாற்றுவதற்கு இந்தியா கோரிக்கையொன்றை முன்வைத்தபோதும் அதனை மறுத்துவிட்டதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

இந்த இரண்டு அதிகாரிகளையும் மீளப்பெற்றமை இந்திய மற்றும் சிறிலங்கா ஆயுதப் படைகளிடையேயான பயிற்சி ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் பாதகமாகாது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.