நெல்சிப் திட்டத்தின் கீழ் வல்வெட்டித்துறை வீதிகள் அமைப்புக்காக
280 இலட்சம் ஒதுக்கீடு
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்ட இரண்டு பிரதான வீதிகளின் அமைப்புக்காக, நெல்சிப் (புறநகும) திட்டத்தின் கீழ் 280 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொண்டைமானாறு சந்தியில் இருந்து செல்வச் சந்நிதி ஆற்றங்கரைரோமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் வரையுள்ள 950 மீற்றர் நீளமான வீதி அமைப்பதற்காக 10 மில்லியன் ரூபாவும்,ஆதிகோயிலடியில் இருந்து கடற்கரையேராமாக உள்ள 275 மீற்றர் நீளமான தடுப்பணையும் தார் வீதியும் அமைப்பதற்காக 18 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை நகர பிதா தெரிவித்தார்.இதற்கான ஆரம்ப வேலைகள் அண்மையில் நகராட்சி மன்றத்தின் தொழில் நுட்ப அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.























Leave a Reply