பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது: உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் நாடு பிரியும்: நிமால் சிறி­பால டி. சில்வா

பிரபாகரனின் மக்களை உடனடியாக மாற்ற முடியாது: உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கினாலும் நாடு பிரியும்: நிமால் சிறி­பால டி. சில்வா

சையன் குப்பியைக் காட்டி ஈழக் கனவை உருவாக்கிய மக்களை உடனடியாக மாற்ற முடியாது. வட மாகாண சபைத் தேர்­தலை முன்­னிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புமுன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது நாட்டை பிரிக்கும் முயற்­சிக்கே வித்­திட்­டுள்­ளது. உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை வழங்­கி­னாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமால் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் தேர்­தலின் பின்னர் கூட்­ட­மைப்பு நாட்டை பிரிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டாலோ அல்­லது தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்கு குந்­தகம் ஏற்­படும் வகையில் செயற்­பட்­டாலோ அதனை தடுப்­ப­தற்­கான மருந்து எம்­மிடம் இருக்­கின்­றது. அந்த மருந்தை உரிய நேரத்தில் உரிய வகையில் நாம் பயன்­ப­டுத்­துவோம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்­கிலும் வெற்­றி­பெ­றவே ஆளும் கட்சி எதிர்­பார்க்­கின்­றது. எனினும் மக்­களின் தீர்ப்பு எவ்­வாறு அமை­கின்­றதோ அதனை ஜன­நா­யக ரீதியில் ஏற்­றுக்­கொள்ள நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் தேசிய ஒரு­மைப்­பாட்டை சீர் குலைப்­ப­தற்கோ அல்­லது நாட்டை இரண்­டாக உடைப்­ப­தற்கோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கு­மானால் அதனை தடுப்­ப­தற்கு என்ன செய்­ய­வேண்டும் என்று எங்­க­ளுக்குத் தெரியும். அதற்குத் தேவை­யா­னதை உரிய நேரத்தில் உரிய முறையில் நாங்கள் முன்­னெ­டுப்போம். எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் குறித்தோ அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ளரின் கூற்­றுக்கள் குறித்தோ நாங்கள் குழப்பம் அடை­ய­வேண்­டி­ய­தில்லை. தேவை­யான நேரத்தில் என்ன செய்­ய­வேண்டும் என்று எங்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும் எனவும் தெரிவித்தர்ர.

மேலும் வாக்­கு­களை பெறு­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வாறு இன­வாத கூற்­றுக்­களை வடக்கில் வெளி­யிட்­டு­வ­ரு­கின்­றது. இதனை மக்கள் புரிந்­து­கொள்­வார்கள். எனவே மக்கள் இதனை ஆத­ரிக்­கின்­றார்­களா? என்­ப­தனை பார்க்­க­வேண்டும். காரணம் தேர்தல் காலத்தில் இவ்­வாறு மக்­களின் உணர்­வு­களைத் தூண்டி வாக்­கு­களை பெறும் முயற்­சிகள் வடக்கில் மட்­டு­மல்ல தெற்­கிலும் இடம்­பெ­று­வது வழக்­க­மாகும் என்றார் அவர்.

ஆனால் வாக்­கு­களை பெற­வேண்டும் என்ற நோக்­கத்தைத் தாண்டி தேர்­தலின் பின்­னரும் கூட்­ட­மைப்பு இவ்­வா­றான நாட்டை துண்­டாடும் வகை­யி­லான செயற்­பாட்டில் ஈடு­பட்டால் அதற்கு என்ன மருந்து வழங்­க­வேண்டும் என்று எங்­க­ளுக்கு நன்­றாக தெரியும். மேலும் மக்­க­ளுக்கு உண்­மையும் யதார்த்­தமும் நன்­றாக தெரியும். எனவே அவர்கள் சிந்­தித்து தேர்­தலில் முடி­வெ­டுப்­பார்கள். மக்கள் புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­வர்கள் எனக் குறிப்பட்டார்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பையும் இறை­மை­யையும் தாண்டி எவரும் செயற்­பட முடி­யாது. அவ்­வாறு யாரா­வது செயற்­பட்டால் அதற்கு என்ன செய்­ய­வேண்டும் என்று எங்­க­ளு­ககுத் தெரியும். இது குறித்து தற்­போது குழப்­பம­டை­ய­வேண்­டி­ய­தில்லை. மருந்து எம்­மிடம் உள்­ளது எனவும் எச்சரித்தார்.

காரணம் எமக்கு உள்ள அனு­ப­வங்­க­ளின்­ப­டியும் எமக்­குள்ள அறி­வின்­ப­டியும் பார்க்­கும்­போது வட மாகாண சபைத் தேர்­தலை முன்­னிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது நாட்டை பிரிக்கும் முயற்­சிக்கே வித்­திட்­டுள்­ளது என்றார்.

அத்­துடன் தற்­போது அவர்கள் உள்­ளக சுய­நிர்­ணய உரிமை குறித்து பேசி­யுள்­ளனர். உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையை வழங்­கி­னாலும் அதன் மூலமும் நாடு பிரியும் என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம். இவை அனைத்தும் எமக்குத் தெரியும். எவ்­வா­றான சுய நிர்­ணய உரி­மையை வழங்­கி­னாலும் ஆபத்து உள்­ளது எனக் குறிப்பிட்டார்.

வடக்கு மக்கள் அனை­வரும் கூட்­ட­மைப்­புடன் உள்­ள­தாக நாம் கருத முடி­யாது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விட பொது மக்­களே எமக்கு முக்­கி­ய­மா­ன­வர்கள். அந்த மக்கள் தற்­போது எமது பக்கம் வர ஆரம்­பித்­துள்­ளனர். இது இல­கு­வான விட­ய­மல்ல. கடந்த 30 வரு­டங்­க­ளாக பிர­பா­கரன் சயனைட் குப்­பியை காட்டி ஈழம் என்ற கனவைக் காட்டி வந்­தவர். எனவே அந்த மக்­களை உட­ன­டி­யாக எமது பக்கம் திருப்ப முடி­யாது. அதற்கு காலம் தேவை. அத­னையே படிப்­ப­டி­யாக செய்­து­வ­ரு­வதாக தெரிவித்தர்ர.

வடக்கில் வெற்றிபெறுவது எமது நோக்கமாகும். ஆனால் வடக்கு மக்கள் 100 வீதம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. எனினும் கணிசமானளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். எவ்வாறெனினும் வட மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமைகின்றதோ அதனை ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் எதிராக செல்ல முடியாது. அதனை ஏற்போம் என்றார் அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published.