வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக தெரிவு

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக தெரிவு

வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் இன்று மாலை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திரு. சீ.வி..விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவு செய்தார்கள்.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.