புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மகளை தீயினால் சுட்ட தந்தை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மகளை தீயில் சுட்ட தந்தை ஒருவர் தொடர்பில் பொகவந்தலாவை பிரதேசத்திலிருந்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்து வயதான சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இரும்பு கம்பி ஒன்றை பழுக்க வைத்து சிறுமியை காயப்படுத்தியுள்ளார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *