வல்வை செய்திகள் விளையாட்டு செய்திகள்

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டியில் இன்று சென் நிக்லசுடன் வல்வை விளையாட்டுக் கழகம் மோதியது

 

ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் யாழின் பெருஞ்சமர் என வர்ணிக்கப்படும் 64 கழகங்கள் பங்குபற்றிய மாபெரும் உதைபந்தாட்டப் போட்டியின் காலிறுதிப் போட்டியின் முதலாவது போட்டி இன்று ஊரெழுவில் ஆரம்பமானது .
Super 8 Matches என்ற முறையின் கீழ் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடவுள்ளன.
இதன் அடிப்படையில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள வல்வை அணி இன்று நாவாந்துறை சென் நிக்லஸ் விளையாட்டுக் கழகத்துடன் மோதியது.
இதில் நாவாந்துறை சென் நிக்லஸ் விளையாட்டுக் கழகம் 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
பிரதீபன் மற்றும் ரசிகரன் ஆகியோர் வல்வை அணிக்காகாக 2 கோல்களைப் பெற்றிருந்தனர்.
சிறந்த தரப்படுத்தல் முறையில் இப்போட்டிகள் அமைவதால் இச்சுற்றுப் போட்டி மிகுந்த யாழ்பாணத்தில் உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *