அர­சாங்கம் மோச­மாக செயற்­ப­டு­கின்­ற­து என்­பதை சர்­வ­தேசம் உணர்ந்துள்ளது:- விக்கிரமபாகு

அர­சாங்கம் மோச­மாக செயற்­ப­டு­கின்­ற­து என்­பதை சர்­வ­தேசம் உணர்ந்து விட்­டது. அர­சாங்­கத்தை விடவும் தமிழ்

மக்­களின் பேச்­சுக்கே முன்­னு­ரிமை கொடுக்­கின்­ற­மை­யா­னது ஜனா­தி­ப­திக்குக் கிடைத்த மிகப்­பெ­ரிய தோல்­வியே என்று நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

அர­சாங்கம் செய்த யுத்த குற்­றங்­களை தமிழ் மக்கள்

உணர்ந்­த­த­னா­லேயே வடக்­கி­லி­ருந்து அர­சாங்­கத்தை

விரட்­டி­யுள்­ளனர்.

இதை அர­சாங்கம் நல்­ல­தொரு பாட­மாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் முக்­கிய சர்­வ­தேச நாடுகள் சில கலந்து கொள்­ளா­மையும் சர்­வ­தேச நாடு­க­ளி­ட­மி­ருந்து நிதி­யு­த­விகள் தடுக்­கப்­பட்­டுள்­ள­மையும் இலங்­கைக்கு பாரிய சிக்கலாகவே அமைந்­துள்­ளது.

குறிப்­பாக இலங்­கையில் நடை­பெற்ற இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட யுத்தக் குற்­றங்­களே இதற்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­து­விட்­டன.

ஐக்­கிய நாடுகள் சபை­யினால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்­தா­மைக்­கான பின்­வி­ளை­வு­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவின் அர­சாங்கம் தற்­போது அனு­ப­வித்து வரு­கின்­றது.

இன்று சர்­வ­தேச நாடுகள் இலங்கை அர­சாங்­கத்தை விடவும் தமி­ழரின் குர­லுக்கே முன்­னு­ரிமை கொடுக்­கின்­றன.

குறிப்­பாக இந்­தியா, கனடா போன்ற நாடுகள் தமி­ழர்­களின் நல­னையே கருத்திற் கொண்டு செயற்­ப­டு­கின்­றன.

உலகில் எந்த நாட்­டிலும் இல்­லாத ஒரு விடயம் இலங்­கையில் இடம்­பெ­று­கின்­ற­தென்றே குறிப்­பிட வேண்டும்.

அதா­வது அர­சாங்­கத்­திடம் கேட்­காது சிறு­பான்மை மக்­க­ளிடம் அனு­மதி கேட்கும் நிலைமை இன்று இலங்­கையில் ஏற்­பட்­டுள்­ளது. இது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு மிகப் பெரி­ய­தொரு தோல்­வி­யாகும்.

எல்லாவற்றுக்குமான இறுதி முடிவை அரசாங்கம் பொது நலவாய மாநாட்டின் பின்னர் பெற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *