இரண்டு இலட்சம் வாக்குகளுக்காகவே கனடா புறக்கணிக்கிறதாம் – அரசாங்கம் கண்டுபிடிப்பு!

இரண்டு இலட்சம் வாக்குகளுக்காகவே கனடா புறக்கணிக்கிறதாம் – அரசாங்கம் கண்டுபிடிப்பு!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதனை எதிர்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் அர­சாங்கம் ஆச்­ச­ரி­ய­ம­டை­ய­வில்லை. அதே­வேளை கட்­சியின் உட்­பூ­சலை கார­ண­மா­கக்­கொண்டு பொது­ந­ல­வாய மாநாடு குறித்து தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தாக ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்­துள்­ளமை குறித்து கவ­லை­ய­டை­கின்றோம் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.இலங்­கையில் நடை­பெறும் மாநாட்டை புறக்­க­ணிக்கும் கன­டாவின் நிலைப்­பாட்­டுடன் ஏனைய நாடு­க­ளையும் இணைப்­ப­தற்­கான அந்த நாட்டின் முயற்சி தோல்­வி­கண்­டுள்­ளது. அந்த வகையில் இலங்கை வெற்­றி­ய­டைந்­துள்­ளது என்றே குறிப்­பி­டலாம் எனவும் அமைச்சர் கூறினார்.

பொது­ந­ல­வாய மாநாட்டை புறக்­க­ணிக்­க­வேண்டும் என்றும் அதனை எதிர்ப்­ப­தா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளமை மற்றும் பொது­ந­ல­வாய மாநாடு குறித்து தீர்­மானம் ஒன்றை எடுக்­க­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்­துள்­ளமை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்
பொது­ந­ல­வாய மாநாடு இலங்­கையில் நடை­பெ­று­வதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்­பதில் எவ்­வி­த­மான ஆச்­ச­ரி­யத்­தையும் அர­சாங்கம் காண­வில்லை.
குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது ஆரம்பம் முதலே புலி­களின் பிர­தி­நி­தி­க­ளா­கவே செயற்­பட்­டு­வந்­துள்­ளது. இந்­நி­லையில் தற்­போது இலங்­கையில் நடை­பெறும் பொது­ந­ல­வாய மாநாட்டை கூட்­ட­மைப்பு எதிர்ப்­ப­தென்­பது புது­மை­யான விட­ய­மல்ல.
சர்­வ­தேச மட்­டத்தில் புலி­க­ளுக்கு சார்­பான புலம்­பெயர் மக்கள் இலங்­கையை அப­கீர்த்­திக்கு உட்­ப­டுத்­த­வே­ணடும் என்­பதில் உறு­தி­யாக இருந்­து­வ­ரு­கின்­றனர். அந்த வகை­யி­லேயே கன­டாவும் சுமார் இரண்டு இலட்சம் வாக்­கு­க­ளுக்­காக இம்­முறை பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தில்லை என்று தெரி­வித்­துள்­ளது.
ஆனால் இலங்­கையில் நடை­பெறும் மாநாட்டை புறக்­க­ணிக்கும் கன­டாவின் நிலைப்­பாட்­டுடன் ஏனைய நாடு­க­ளையும் இணைப்­ப­தற்­கான அந்த நாட்டின் முயற்சி தோல்­வி­கண்­டுள்­ளது. அந்த வகையில் இல ங்கை வெற்­றி­ய­டைந்­துள்­ளது என்றே கூற­வேண்டும். காரணம் கன­டாவின் தீர்­மா­னத்தில் கன­ டாவே தனி­மை­ய­டைந்து காணப்­ப­டு­கின்­றது. எந்­த­வொரு நாடும் கன­டாவை பின்­பற்­ற­வில்லை. பல நாடுகள் தமது பங்­கு­பற்­று­தலை உறு­தி­ப்ப­டுத்­தி­யுள்­ளன. அத­னால்தான் கனடா தனது முயற்­சியில் தோல்­வி­ய­டைந்­து­விட்­டது என்று கூறு­கின்றோம்.
இது இவ்­வாறு இருக்க தமது கட்­சியின் உட்­பூ­சலை கார­ண­மா­கக்­கொண்டு பொது­ந­ல­வாய மாநாடு குறித்து தீர்­மானம் ஒன்றை எடுப்­ப­தாக ஐக்­கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளமை குறித்து கவலை யடைகின்றோம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியானது இன்று நாட்டுக்கு நகை ச்சுவையை வழங்கும் கட்சியாக மாறி யுள்ளது.
கட்சி உட்பூசலினால் ஏற்பட்டுள்ள நிலைமையை காரணம் காட்டி மிகப் பிரதான சர்வதேச மாநாடு ஒன்றை பகிஷ்க ரிப்பதானது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.