செய்திகள்

இசைப்பிரியா வீடியோ உண்மை எனில் நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் – ஜெயந்தி

இசைப் பிரியாவை இலங்கை ராணுவ சிப்பாய்கள் கொன்றது குறித்த வீடியோ உண்மை என்று தெரிய வந்தால், நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும், செய்தி வாசிப்பாளராக இருந்தவருமான இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றது தொடர்பான வீடியோவை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதனால், இலங்கை அரசாங்கத்தின் மிக கொடூரமான கோர முகம் மீண்டும் ஒரு முறை உலகத்துக்குத் தெரிய வந்துள்ளதாக கூட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *