புலி ஆதரவாளர்களின் சவாலை எதிர்கொள்ளத் தயாராம் – கெஹெலிய அறிவிப்பு!

புலி ஆதரவாளர்களின் சவாலை எதிர்கொள்ளத் தயாராம் – கெஹெலிய அறிவிப்பு!

இலங்கையை சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்­கத்­து­ட­னேயே சனல் 04 நிறு­வனம் மீண்டும் ஒரு­முறை காணொளிக் காட்­சி­களை வெளி­யிட்­டுள்­ளது. இதனை இலங்கை அர­சாங்கம் கணக்கில் எடுக்­க­வே­யில்லை. சனல் 4 நிறு­வனம் மீண்டும் ஒரு­முறை தோல்வி­காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.சர்­வ­தேச முக்­கி­யத்­துவம் வாய்ந்த செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும்­போது இவ்வாறு காணொளிக் காட்­சி­களை வெளி­யிட்டு இலங்­கையை அப­கீர்த்­திக்கு உட்­ப­டுத்­து­வது சனல் 04 நிறு­வ­னத்தின் வழ­மை­யா­கி­விட்­டது. எனவே அதனை நாம் கவ­னத்தில் கொள்­ள­வே­யில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையில் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும் சர்­வ­தேச மட்­டத்தில் புலி ஆத­ரவு புலம் பெயர் மக்­களின் செயற்­பா­டுகள் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. அந்த சவாலை எதிர்­கொள்ள அர­சா­ஙகம் தயா­ரா­கவே இருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் கலைஞருமான இசைப்பிரியா உயிருடன் பிடிபடும் காட்சியைக்­கொண்ட புதிய காணொளியை சனல் 4 நிறு­வனம் வெளி­யிட்­டுள்­ளமை தொடர்பில் கருத்துக் கூறுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் சனல் 4 நிறு­வனம் மீண்டும் ஒரு­முறை இலங்கை அர­சாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தும் முயற்சியில் வீடியோக் காட்சியை வெளியிட்டுள்­ளது. இதனை எமது அர­சாங்கம் கணக்கில் எடுக்­க­வே­யில்லை.

காரணம் சனல் 4 நிறு­வ­ன­மா­னது பொய்­யான விட­யங்­க­ளையே இவ்­வாறு வெளி­யிடும் என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்­து­விட்­டது. சர்­வ­தே­சத்­துக்கும் இந்த விடயம் தெரிந்­து­விட்­டது. எனவே சனல் 4 நிறு­வ­னத்தின் இந்த தோல்­வி­ய­டையும் முயற்சி குறித்து நாங்கள் அலட்­டிக்­கொள்­ள­வில்லை. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கெலும் மெக்­கரே பொது­ந­ல­வாய மாநாட்டின் செய்தி சேக­ரிப்­புக்கு வரு­வ­தற்கு அனு­மதி வழங்­கவும் நாங்கள் தயா­ரா­கி­யுள்ளோம்.

ஐக்­கிய நாடுகள் சபையின் அமர்­வுகள் மற்றும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை அமர்­வுகள் நடை­பெ­றும்­போதும் பிரித்­தா­னி­யாவில் முக்­கி்­ய­மாக ஏதா­வது நிகழ்­வுகள் இடம்­பெற்­றாலும் சனல் 4 நிறு­வனம் இவ்­வாறு வீடியோக் காட்­சி­களை வெளி­யி­டு­வது வழ­மை­யா­கி­விட்­டது.

தற்­போது இலங்­கையில் பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாடு நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்த வீடியோக் காட்­சியை முன்­வைத்­துள்­ளனர்.

எனினும் அந்த நிறு­வ­னத்தின் இந்த முயற்­சி­யா­னது தற்­போது பெறு­ம­தி­யற்­ற­தா­கி­விட்­டது. பொய்­யான முயற்­சி­களை தொடர்ந்து முன்­னெ­டுக்­கும்­போது இந்த நிலை ஏற்­படும்.

நான் அந்த வீடியோக் காட்­சியை பார்­வை­யி­ட­வு­மில்லை. பார்க்­க­வேண்­டிய அவ­சி­ய­மு­மில்லை. காரணம் சனல் 4 நிறு­வனம் தொடர்ந்து பொய்­யான விட­யங்­க­ளையே வெளி­யிட்­டு­வ­ரு­கின்­றது. எனவே அது குறித்து நாம் கவனம் செலுத்­த­வேண்­டி­ய­தில்லை.

அதா­வது இலங்­கையில் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்­டாலும் சர்­வ­தேச மட்­டத்தில் புலி ஆத­ரவு புலம் பெயர் மக்­களின் செயற்­பா­டுகள் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. அந்த சவாலை எதிர்கொள்ள அரசாஙகம் தயாராகவே இருக்கின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.