அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிஆட்டமும்,மூன்றாம் இடத்திற்கான ஆட்டமும் தற்போது ரெயின்போஸ் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் ரெயின்போஸ் அணிகள் மோதின இவ் ஆட்டத்தில் ரெயின்போஸ் வி.க ஒரு கோல்களை அடித்து மூன்றாம் இடத்தினை தனதாக்கியது,அடுத்த ஆட்டத்தில் சைனிங்ஸ் வி.க எதிர் தீருவில் வி.க மோதுகின்றது விரைவில் முடிவுகள் கிடைக்கும்.அதனைதொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.





























































Leave a Reply