பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தினமும் 12 பேருந்துகளை மாறி பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளான்.
பிரித்தானியாவின் மேற்கு யோக்ஷைர் (West Yorkshire) நகரை சேர்ந்த கெல்லி-டேவிட் டையலர் (Kelly-David Taylor) என்ற தம்பதியினர் தங்களது வீட்டை மாற்றியுள்ளனர்.
வெறும் 12 வீடுகள் மட்டுமே தாண்டி சென்றுள்ள இவர்களை பள்ளி வளாகத்தின் பகுதியை தாண்டியதாக கூறி, அவர்களின் மகன் ஏய்டன் (Aiden Age-5) மற்றும் அவனது சகோதரனுக்கு தொலைவில் உள்ள வேறு ஒரு பள்ளிக்கூடத்தை அங்குள்ள கவுன்சில் நியமித்துள்ளது.
இதனால் டையலர் தனது இரு மகன்களையும் பள்ளிக்கூடத்தில் விட்டிவிட்டு வீடு திரும்ப தினந்தோறும் 12 முறை பேருந்தில் பயணம் செய்யும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
இத்தம்பதியினர் தங்களது மகன்கள் அதே பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்பதால் தான் பள்ளிக்கு மிக அருகில் வீட்டை மாற்றியுள்ளனர்.
ஆனால் கவுன்சில் மிகவும் தூரத்தில் உள்ள வேறொரு பள்ளிக்கூடத்தை மாற்றியுள்ளது இவர்களை பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் பல முறை கவுன்சிலிடம் முறையிட்டும், வீட்டின் அருகில் உள்ள பள்ளிகூடத்தில் இடம் காலியாக இல்லாததால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.