Search

பிரிட்டனையும் தாக்கிய எபோலா வைரஸ்

ஆப்ரிக்க நாட்டில் இருந்து ஸ்காட்லாந்து வந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய எபோலா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடான சியாரா லியோனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு வந்த பெண் மருத்துவ ஊழியர் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பதை நேற்று முன்தினம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது எபோலா நோயாளியான இவருக்கு, தற்போது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோய்கான அறிகுறி தென்பட்ட உடனே கண்டுபிடிக்கப்பட்டதால், மற்றவர்களுக்கு பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக ஆப்ரிக்காவில் எபோலா தடுப்பு பணியை மேற்கொண்டுவிட்டு பிரிட்டன் திரும்பிய மருத்துவ ஊழியர் ஒருவருக்கு எபோலா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *