01.09.2026 – நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழாவின் 16ஆம் நாள் மாலைத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது, சிங்க வாகனத்தில் எழுந்தருளிய நல்லூர்க் கந்தன், ஆலய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கந்தப் பெருமானின் அருளைப் பெற்றனர். விழா முழுவதும் பக்தி நிறைந்த சூழல் காணப்பட்டது.
வேல் உண்டு – வினையில்லை!
மயில் உண்டு – பயமில்லை!
நல்லூர்க் கந்தன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
நல்லூர் கந்தசுவாமி பெருமானே போற்றி!










