Thursday, August 27, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home சிறப்பு செய்திகள்

நன்றி ஜசீகா…- ச.ச.முத்து

by admin
24/02/2015
in சிறப்பு செய்திகள்
0
நன்றி ஜசீகா…- ச.ச.முத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர்கள் எல்லோருக்குள்ளும் ஓலமிட்டுக்கொண்டிருக்கும் பெரு வலி ஒன்றை தாயகம் இழந்த பெரும் சோகத்தை உலகின் மெத்தனப்போக்கால் அழிக்கப்பட்ட ஒரு அருமையான விடுதலை போராட்டத்தின் நினைவுகளை மீட்டு எடுத்த ஒரு பெரும் காரியத்தை செல்வி.ஜெசீகா யூட்’ அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஒரு பாடல்.அதுவும் இரண்டு பாடல்களை மிககவனமுடன் இணைத்து பாடிய லாவகம்.

அது எல்லாவற்றையும்விட அந்த பாடல் சொன்ன கருத்து.வயலின் கலைஞர்களின் ஆரம்ப மெருகூட்டலுடன் மெதுவாக தோல்வி நிலையென நினைத்தால் என்று ஆரம்பிக்கும்போதே பெரும் சுனாமி ஒன்றை மனங்களுக்குள் உருவாக்கி வைக்கப்போகின்றது என்ற அடையாளங்கள் தெரியஆரம்பித்த அந்த அற்புதம் அந்த குரல்.

இந்த சுப்பர்சிங்கர்,யூனியர்சிங்கர்,பேபிசிங்கர் போட்டிகளை பற்றியும் அதன் பின்னால் உள்ள வியாபார,சந்தைப்படுத்தும் ரசவாதங்கள் பற்றியும் ஆயிரம்பக்கங்கள் எழுதலாம்.அதிலும் இத்தகைய போட்டிகளில் ஏற்றப்படும் மிகமிக சிறு குழந்தைகள் மிகவும் யந்திரத்தனமாக இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனேயே பயிற்றுவிக்கப்படுவதும் அந்த போட்டியிலேயே பார்த்தும் கொள்ளலாம்.சில வேளைகளில் அது மனதுக்குள் சுருக் என்று தைப்பதும் உண்டு.

எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள் என்பதே தொலைக்காட்சிகளின் விளம்பரகட்டணங்களை தீர்மானிக்கும் என்பதால் அந்த பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்காக எல்லாவிதமான ஜிகினா வேலைகளையும் செய்யத்தயாரான தொலைக்காட்சிகளின் மரதன் ஓட்டபோட்டியில் இதுவும் ஒரு நிகழ்வு.

ஆனால் இவை அல்ல முக்கியம்.இத்தகைய ஒரு மேடையைக்கூட தனது மக்களின் கூட்டுவலியை, உலகின் மிகப்பெரும் செழுமைகளை கொண்ட பழமையான செம்மொழியை பேசும் ஒரு மக்களிடம் இருந்து அவர்களின் தாய்நிலம் எப்படி பிடுங்கி எறியப்பட்டது என்றும்,மண் இழந்து வெளியேறும் சோகத்தை ஒத்த துயரம் வார்த்தைகளால் வடியப்படக்கூடியது அல்ல என்று லட்சம் கோடி மக்கள் பார்க்கும் போது வெளிப்படுத்தியதற்கு ஜசீகாவின் பாடல் தெரிவு அபாரம்.அதனைவிட முழுக்க முழுக்க தோல்விகளாலேயே சூழப்பட்ட ஒரு இனத்தின் குரல் ‘உரிமை இழந்தோம் உடமையை இழந்தோம் உணர்வை இழக்கோம் என்று சொல்வதுபோலவே ஜசீகா தமக்காகவே பாடியதாக பல லட்சம் மக்கள் மனதால் நினைக்கும் அளவுக்கு எல்லோருடைய குரலாகவுமே ஜசீகா பாடி இருக்கிறார்.

இங்குதான் இன்னொரு முக்கியமான விடயமும் இந்த காலத்துக்கான பாடமும் இருக்கிறது.இன்று அரசியல் செய்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் பெரீயவர்கள் அனைவருக்கும் சேதியும் இதில் உள்ளது.அதுதான் கிடைக்கும் தளத்தை,கிடைக்கும் மேடையை,கிடைக்கும் ஒற்றை சந்தர்ப்பத்தைக்கூட எவ்விதம் எம் மக்களின் அபிலாசைகளை சொல்ல பயன்படுத்துவது என்பதே.தமிழகதொலைகாட்சிகள் அனைத்தும் வேறுவேறு பெயர்களில் வேறுபட்ட நடுவர்கள் வித்தியாசமான அனுசரணையாளர்களை முன்னிறுத்தி இப்படியான பாட்டுப்போட்டிகளை, சிறந்த குரல் தேர்வுகளை நடாத்திவருகிறார்கள்.அப்படியான ஒரு நிகழ்ச்சிதான் விஜய் தொலைக்காட்சியின் ‘யூனியர்சுப்பர்சிங்கர்’ நிகழ்ச்சியும். ஆனால் பாருங்கள். ஒரு சாதாரண பாடல்நிகழ்ச்சியை தனது தேசத்தின்அடிமை நிலையை சொல்ல பயன்படுத்துகிறார்  என்று.அது.அது மிக முக்கியம். எல்லா இழந்தாலும் இழக்கமுடியாத நம்பிக்கையில் எழுவதுதான் இத்தயை முயற்சிகள்.ஒரு திரைப்பட பாடல்.எந்த காட்சிக்காவோ,எந்த கதாநாயகனுக்காகவோ எழுதப்பட்ட பாடல்.ஆயினும் அதுவே இந்த இடத்தில் அந்த பாடலின் திரைக்காட்சி அனைத்தையும் மறக்க வைத்துவிட்டு ஏதோ நம் உயிரை தொலைத்த சோகம் போல,நம் மனங்களுக்குள் வெளிப்படுத்த முடியாமல் திரண்டு நின்ற சோகத்தின்,பெரு வலியின் வெளிப்பாடாக அனைத்து தமிழர்களும் பார்த்து உணர வைத்த கச்சிதம் இந்த மேடை தெரிவு. இதனை சொல்ல அந்த சிறுமி ஜசீகாவோ அவளின் தாய் தந்தையோ எந்தவொரு ராஜதந்திர கல்லூரியிலும்,சட்டநிறுவனத்திலும் கற்று வரவில்லை.அவர்கள் ஒரு இனத்தின் சோகம் பற்றி தெரிந்து,மனதால் உணர்ந்து வந்திருக்கிறார்கள்.அதன் வெளிப்பாடுதான் இந்த பாடலும் அது ஏற்படுத்திய அலைகளும்.

ஒரு பெரும் பேரணி அல்லது ஒரு பெரும் அரசியல்போராட்டம் என்னவிதமான சலசலப்புகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இந்த சிறுமியின் பாடலும் அதனை அவள் உள் உணர்வுகலந்துபாடிய விதமும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதான் விடுதலைக்கான ஒரு தேசியஇனத்தின் முயற்சி.விடுதலைக்கான குரலை எந்த இடத்திலும் எப்போதும் வெளிப்படுத்தியபடியே இருந்தாக வேண்டும் என்பதை இதில் நாம் பார்க்கலாம்.

கிடைக்கின்ற சந்தர்பங்களைக்கூட அடிபணிவு கருத்துகளையும், அடிமை சொல்லாடல்களையும் வெளிப்படுத்தி உலக சக்திகளின் குரலாக தம்மை தாமே கருதும் பெரியவர்கள் எல்லோருக்கும் இந்த சிறுமி சொல்லி இருக்கும் சேதி உறைக்ககூடியது.உணர்ந்தால் நன்று.நிச்சயமாக இந்த பாடலை கேட்ட எவரும் அன்று ஏதோ ஒரு கணத்தில் தன்னும் நினைத்திருப்பார்கள் தமிழீழம் வென்றாக வேண்டும் என்று.இவர்களின் தாயகவிடுதலை கனவு நனவாக வேண்டும் என்று.

அதுவே அந்த பாடல் ஏற்படுத்திய வெற்றி. அது போதும்.அதற்காக பாராட்டுவோம் ஜசீகாவை. பிறகு, இந்த பாடலை கேட்டு,அல்லது மீண்டும் மீண்டும் கேட்டு அழுதுவிட்டு அப்படியே துவண்டு கிடக்கப்போகின்றோமா..?அது அழுவதற்கான பாடல் அல்ல.எழுவதற்கான பாடல்.

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

Share this on WhatsApp
admin

admin

Related Posts

நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை!

by admin
09/03/2016
0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால் விரக்தியடைந்த ரவீந்திரன் என்கிற ஈழத்தமிழ் ஏதிலியின் சாவுச்...

நேற்றைப்போல ஒரு இன்றும் ஒரு மாற்றமுமில்லாத நாளையும்…- ச.ச.முத்து

நேற்றைப்போல ஒரு இன்றும் ஒரு மாற்றமுமில்லாத நாளையும்…- ச.ச.முத்து

by admin
18/08/2015
0

இந்த ஆக்கம் வெளிவரும்போது ஒருவேளை வாக்குஎண்ணிக்கை தொடங்கிவிட்டிருக்கலாம்.முடிவுகளில் சிலகூட வெளியாகி இருக்கவும்கூடும்.புலத்தின் ஊடகங்கள் தமது நேரலை நிகழ்வுகளில் ஆய்வுகளை நடாத்தி மாற்றத்துக்கான ஒரு தேர்தல்போல ஒரு மாயையை...

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)

by admin
30/03/2015
0

2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk , www.results.exams.gov.lkஆகிய இணையத்தளங்களில்...

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப்  புழுதியில் யார் எறிந்தார்!!!

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!!

by admin
01/03/2015
0

                        என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார்...

யாழில் படைக்கெடுபிடிகள் மத்தியில் பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்!!

யாழில் படைக்கெடுபிடிகள் மத்தியில் பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்!!

by admin
24/02/2015
0

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள்  தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை...

ஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.

ஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.

by admin
23/02/2015
0

                ஏங்கி ஏங்கியே வாழும் எங்களின் வாழ்வின் வலியை ஒற்றை ஆளாய் நின்று ஓங்கி ஒலித்த எங்கள்...

Next Post
நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி ..

நெடியகாடு இ. வி. கழகம் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தும் jaffna challengers cup உதைபந்தாட்ட சுற்று தொடரில்-சென் அன்டனிஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி ..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.