Wednesday, August 26, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home செய்திகள்

இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்: நாம் தமிழர் கட்சி

by admin
26/11/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்: நாம் தமிழர் கட்சி

 மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.

 நம் இனத்திற்கு நேர்ந்த அந்த இழிநிலையை மாற்ற, சிங்களர்களுக்கு இணையான அரசியல் விடுதலையைப் பெற ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான், நம் மண்ணைக் காக்க, நம்மினத்தின் மானத்தைக் காக்க, நமது இறைமையை மீட்க, தமிழீழத் தேசத்தில் தன்னாட்சியை படைக்க உருவானதே தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டமாகும். உன்னதமான அந்த விடுதலை இலட்சியைத்தை நோக்கிய போராட்டத்தை, அக, புற வலிமையுடனும் உறுதியுடனும் முன்னெடுத்தவர்தான் நவம்பர் 26ஆம் நாளான இன்று பிறந்த நாள் காணும் நமது தலைவர், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகத் திகழும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

 தனது பிறந்தநாளுக்கு நமது தலைவர் முக்கியத்துவம் அளித்திடவில்லை. அதற்கு மாறாக, நவம்பர் 27ஆம் நாளையே தமிழ்த் தேசியத்தின் எழுச்சிமிக நாளாக, நம் இனத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், குடும்ப உறவுகளையும், மானுடம் எல்லாவற்றினும் பெரிதாகக் கருதும் உயிரையே ஆயுதமாக்கிய போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் தினமாக அறிவித்து, அதனை தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத்தான் நாம் தாய்த் தமிழ் நிலமான தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கடைபிடித்து வருகின்றோம்.

 மாவீரர் தினமென்பது நமது மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த அந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளல்ல, மாறாக, அந்த ஈகையின் நோக்கம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க நாம் உறுதியேற்பதற்கேயாம். இதனை நமது தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரைகளில் இருந்து நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். நம் இனத்தை அடிமைப்படுத்தி, தமிழீழ தேசத்தை சிங்கள மயமாக்கிடும் நோக்கோடு நம் மீது இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள பெளத்த இனவாத அரசை எதிர்த்து, நம் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீரர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் மெளனிக்கப்பட்டது. விடுதலைக் களத்தில் ஏற்பட்ட அந்த பின்னடைவைப் பயன்படுத்திக்கொண்டு, முடிந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இலங்கை அரசும், தம்மை இனத்தின் தலைவர்கள் என்று பீற்றிக்கொண்டவர்களும் கூச்சமின்றி பேசிய நிலையில்தான், நாம் தமிழர் கட்சி பிறந்தது. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழினத்தை தட்டி எழுப்பியது. இனத்தின் விடுதலை என்கிற அந்த உன்னத இலட்சியத்தை நிறைவேற்ற ஜனநாயக வழியில் தமிழ் மக்களைத் திரட்டி போராடுவது என்று உறுதிபூண்டு, நம்மினத்தில் முளைத்த துரோகிகளின் துணையுடன் இனப் பகைவர்கள் புணைந்த அரசியல் சதியை தொடர்ந்து முறியடித்து, தமிழினத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் காத்து வருகிறது.

 இனத்தின் விடுதலை என்பது மற்றுமொரு பிரச்சனையல்ல, அது அரசியலும் அல்ல, அது எம்மினத்தின் புனிதமான உரிமை. அதனை விட்டுத்தந்துவிட்டால், பிறது நமக்கென்று அரசியல் என்பதற்கு எந்த  அடிப்படையும் இல்லை. எனவேதான் மாவீரர் தினத்தை கடைபிடிக்கும் நாம், அந்த நாளில், நமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வேளையில், எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதியேற்கிறோம். இந்த உறுதியை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாளில் மனப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒன்றிணைந்த திரட்சியே இனத்தின் விடுதலை வென்றெடுப்பதற்கான புரட்சியாகும் என்பதை தமிழர் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

 நம் இனத்தை பூண்டோடு அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழீழ தேசத்தின் மீது தொடுத்த போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். போரின் கடைசி நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலில் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் சொந்தங்கள் கொன்று புதைக்கப்பட்டனர். ஆனால் இதனை இன அழிப்பு என்று இதுவரை எந்த ஒரு நாடும் கூறவில்லை. தமிழினத்திற்கு எதிரான அந்தப் போரில் போர்க் குற்றங்கள்தான் நடந்துள்ளது என்று கூறுகின்றனவே தவிர, உண்மையில் நடந்த இனப் படுகொலையை பேச மறுக்கின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அங்கு நடந்தது போர்க்குற்றமல்ல, அந்தப் போரே குற்றம் என்றும், அதில் எம்மினத்தின் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், அது திட்டமிட்ட இன அழித்தலே என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காகவே சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

 இப்படிப்பட்ட சர்வதேச சூழலில்தான், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க முன்னணியில் இன்று உழைத்திடம் நம் இனத்தின் பெருமைமிக்க போராளிகளை, நம் இனத்தில் தோன்றிய துரோகிகளைக் கொண்டே அழித்திடும் வேலையை சிங்கள அரசு செய்து வருகிறது. அதுதான் நம் தலைவரால் பன்னாட்டு அரசியலிற்காக நியமிக்கப்பட்டு, அரும்பணியாற்றிவந்த மதீந்திரன் எனும் பரிதி பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வாகும். தமிழினத்தின் ஆயுத போராட்டத்தை முடக்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்த நம் இனத்தின் எதிரியாக சிங்களம், அது சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரிவதை சகிக்க முடியாமல் மேற்கொண்ட நடவடிக்கைதான் பரிதியின் கொலையாகும். எனவே நமது இனத்தின் விடுதலையை முறியடிக்க எதையும் செய்த நம் எதிரிகள் முனைப்பாக செயலாற்றிவரும் நிலையில், அதனை முறியடித்து, விடுதலையை வென்றெடுக்க இனத்தின் ஒற்றுமை ஒன்றே ஒரே வழியும் வலிமையுமாகும். இலக்கை நோக்கிய ஒன்றிணைந்த செயல்பாடே அந்த ஒற்றுமையை உண்டாக்கும்.
ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவு சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம்.

நாம் தமிழர் கட்சிக்காக,

 செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

Share this on WhatsApp
admin

admin

Related Posts

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

by சேரன்
23/08/2026
0

தெற்காசியாவில் பொதுமக்களால் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை உருவெடுத்துள்ளதாக Pew Research Center மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

by சேரன்
21/08/2026
0

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

by சேரன்
20/08/2026
0

இலங்கை தற்போது பல தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு தீவிரமான எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்...

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

by சேரன்
18/08/2026
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. டொக்டர்...

மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

by சேரன்
15/08/2026
0

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா இன்று (15) பக்தி பூர்வமாக சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் மடு மாதா...

குற்றங்களை வீடியோ எடுத்து பொலிஸாருக்கு அனுப்புங்கள் – பொதுமக்களுக்கு அறிவிப்பு

குற்றங்களை வீடியோ எடுத்து பொலிஸாருக்கு அனுப்புங்கள் – பொதுமக்களுக்கு அறிவிப்பு

by சேரன்
14/08/2026
0

குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர். குற்றங்கள் அல்லது ஆபத்தான சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் பொதுமக்களிடம் இருந்தால்,...

Next Post

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2012 சுவரொட்டிகள்.......!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.