Tuesday, August 25, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home செய்திகள்

ஐ.நாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக பொதுமக்களை அச்சுறுத்தும் படைப் புலனாய்வுப் பிரிவினர்.

by admin
01/01/2013
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர்க்காலங்களிலும், போர் முடிவடைந்த பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யும் குடும்பங்களைச் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்திவருகின்றனர். சிறீலங்கா படையினராலும், ஆளுங்கட்சி அரசியல் வாதிகளினாலும் சாதாரண பொதுமக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதுடன், மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுவருவதனால் சிறீலங்கா அனைத்துலக சமூகத்தின் சீற்றத்திற்குள்ளாகியுள்ளதால் அதிலிருந்து மீள்வதற்காக மகிந்த அரசாங்கம் முழு அளவிலான அனைத்துப் பலத்தினையும் பிரயோகித்துவருகின்றது.

கடந்த 2010 ஆண்டு மகிந்தவினால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழவின் முன், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வாக்கு மூலம் அளிக்கப்பட்ட பின்னர், பலர் அச்சுறுத்தப்பட்டதுடன், கொழும்பிலுள்ள 4ஆம் மாடிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டதுடன், புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பியனுப்பினர்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழுவில் முன் தாம் சுதந்திரமாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் கூறிய போதிலும், வாக்குமூலம் அளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் முறைப்பாடு செய்த பெண் ஒருவர் சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரால் அடிக்கடி விசாரிக்கப்படுவதும், 4ஆம் மாடிக்கு வருமாறும் அழைப்புவிடுவதுமாக உள்ளனர். எனினும், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளார்.

இவ்வாறு போர்க்காலத்தில் ஆயிரக்கணக்காணவர்கள் காணாமல் போன அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் போர் முடிவடைந்த பின்னார் 2007 ஆம் ஆண்டு நடுப் பகுதியிருந்து சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியும் அவர்களை கண்டறிவதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பல தடவைகள், பல ஆணைக்குழு முன்ணிலையில் சாட்சியங்களாக வாக்குமூலம் வழங்கப்பட்டதுடன், சிறீலங்காவில் இருக்கும் வெளிநாட்டுத் தூதரகங்கள், தொண்டு நிறுவனங்கள் என விண்ணப்பங்களையும், மனுக்களையும் கொடுத்துள்ளதுடன், காணாமல் போனவர்களை விடுதலை செய் அல்லது அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடு என கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தினர். எனினும், சிறீலங்கா அரசாங்கம் உட்பட சம்மந்தப்படடவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில்தான் இன்று பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேசத்தின் உதவிகளை நாடியுள்ளனர்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதிக்கு சென்ற குற்றத்தடுப்புப் பிரிவினர் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை யாரும் வெளிநாட்டில் இருப்போருக்கு அளிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊர்தி ஒன்றில் சென்ற புலனாய்வுப் பிரிவினர் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டம் எனத் தெரிவித்து, அப்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இதன்போது, உங்களின் பிள்ளைகள் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளார்களா? அல்லது அப்படிப்பட்டவர்கள் தற்போது உள்ளார்களா? எனக் கேட்டுள்ளார்கள்.

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போன்று, அனைத்து சொத்துக்களையும் இழந்து, சொத்துக்கும் மேலான தமது உறவுகளை இழந்து தவிப்பவர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக உணர்கின்றனர். எனினும், அச்சுறுத்தலுக்கு அடிபணியாத தம்பலகாம மக்கள் எங்கள் பிள்ளைகள் கடத்தப்பட்டும், கைது செய்தும் காணாமல் போயுள்ளார்கள். எனவே அவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்குமாறு கோரியுள்ளனர். எனினும் அதற்கு அவர்கள் எவ்விதமான பதில்களையும் புலனாய்வுப் பிரிவினர்கள் தெரிவிக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்தான், காணாமல் போனவர்கள் தொடர்பாக வெளிநாடுகளுக்கோ அல்லது  ஐ.நாவுக்கோ தக வல்களை வழங்கக் கூடாது என எச்சரித்துள்ளார்கள். பலதடவைகள் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் எதிர்கொண்ட மக்கள் சீ.ஐ.டியினரின் நடவடிக்கை தொடர்பாக காணாமல் போன அமைப்பு உட்பட தொண்டு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்வதற்கு அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவர்களின் நிலைகளை அறிந்து கொள்வதற்காக காணாமல் போனவர்களின் சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் பல நடவடிக்கை எடுத்த போது அதன் உறுப்பினர்களும் காணாமல் போன சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றமை அனைவருக்கும் நினைவிருக்கலாம். மகிந்த அரசாங்கத்தின் கொடூரமான ஆட்சியினால் பொதுமக்களை எவ்விதமான ஜனநாயக ரீதியான போராட்டங்களையோ, அல்லது உரிமை கோரிய போராட்டங்களையோ முன்னெடுக்க முடியாத நிலையில்தான் மக்கள் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுகின்றனர்.

சிறீலங்காவில், ஜனநாயகத்திற்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டுள்ளது, அத்துடன் அறைகுறையாக இருக்கும் நீதித்துறையையும் குழியில் போட்டு மூடுவதற்காக மகிந்த அரசாங்கம் பல்வேறு அடாவடிகளையும் மேற்கொண்டுவருகின்றது. கண்ணியத் தொழிலாகக் கொள்ளப்படும் மருத்துவம், சட்டத்துறையினருக்கு நாளை என்ன நடக்கும் என்ற அச்சத்தில் இந்ததுறையில் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

இன்று சிறீலங்காவில் பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது. வாய் திறந்து பேச முடியவில்லை. குற்றங்களையும், ஊழல்களையும் வெளிக் கொண்டுவர முடியவில்லை. எதிரணி அரசியல் வாதிகள் உட்பட சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடமுடியவில்லை. இவ்வாறான நிலையில்தான் சர்வதேசத்தின் உதவிகள் இலங்கையிலுள்ளவர்களினால் கோரப்படுகின்றன.

தாங்கள் பாதிக்கப்பட்டால் அண்டைய நாடான இந்தியா உதவும் என கடந்த காலங்களில் இலங்கையில் வாழும் தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவோ குற்றங்களை செய்யும் மகிந்த அரசாங்கத்திற்கு ஊக்கமளிக்கும் செயற்பாடாக மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்களப் படைகளுக்கு பயிற்சிகளையும், தொழிநுட்ப வசதிகளையும் மேற்கொண்டுவருகிறது. ஒரு இனத்தின் அழிவைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பியுள்ள அண்டைய நாடுகள் இன்று பாதிக்கப்பட்ட சமூகத்தை மேலும் பாதிக்கும் வகையில் தனது செயற்த்திட்டங்களை முன்னெடுக்கின்றன.

இவ்வாறான நிலையில், யாழ்குடாநாட்டில் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை படையினரின் கண்காணிப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்ற நிலையில், வெள்ளை ஊர்தியில் கடத்துவதும், கைதுகள் எனவும் மீளவும் சிறீங்காப் படையினர் தமது கொடூரக் கரங்களை நீட்டியுள்ளனர்.

கடந்த கார்த்திகை மாதம் 27 நாள் அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் தேசிய விடுதலைக்காக உயிர் நீர்த்தவர்களின் நினைவேந்தும் நிகழ்வில் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதையடுத்து இன்றுவரையில் மாணவர்கள், முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் உட்பட 52 பேர் கடத்தப்பட்டும், கைது செய்தும் வதை முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தடுத்துவைத்தல் தொடர்பாகவும், கைதுகள் தொடர்பாகவும் புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசாங்கத்தின் அடாவடிகளைக் கண்டித்தும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எமது உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்களினால் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக இவ்வாறு காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடக் கூடாதென படைப் புலனாய்வுப் பிரிவினர் மக்களை அச்சுறுத்திவருகின்றனர்.

அதுமாத்திரமல்ல, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ள சிறீலங்கா, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும், யாழ்குடாநாட்டில் இடம்பெற்றுவரும் அகிம்சை வழியிலான போராட்டங்களை தடுப்பதிலும் பெரும் ஏற்பாடுகளை செய்துவருகிறது.

எவ்வாறாயினும், ஈழத்திலுள்ளவர்கள் தங்களால் இயன்றளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிக்காட்டிவருகின்ற போதிலும், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களையும், கவன ஈர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதே இன்றைய காலத்தில் தேவை.

நன்றி : ஈழமுரசு

Share this on WhatsApp
admin

admin

Related Posts

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

by சேரன்
23/08/2026
0

தெற்காசியாவில் பொதுமக்களால் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை உருவெடுத்துள்ளதாக Pew Research Center மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

by சேரன்
21/08/2026
0

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

by சேரன்
20/08/2026
0

இலங்கை தற்போது பல தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு தீவிரமான எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்...

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

by சேரன்
18/08/2026
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. டொக்டர்...

மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

by சேரன்
15/08/2026
0

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா இன்று (15) பக்தி பூர்வமாக சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் மடு மாதா...

குற்றங்களை வீடியோ எடுத்து பொலிஸாருக்கு அனுப்புங்கள் – பொதுமக்களுக்கு அறிவிப்பு

குற்றங்களை வீடியோ எடுத்து பொலிஸாருக்கு அனுப்புங்கள் – பொதுமக்களுக்கு அறிவிப்பு

by சேரன்
14/08/2026
0

குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர். குற்றங்கள் அல்லது ஆபத்தான சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் பொதுமக்களிடம் இருந்தால்,...

Next Post

உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்து உறவுகளை பழ.நெடுமாறன் சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

Newsletter

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor.
SUBSCRIBE

Category

  • 11+
  • 2020
  • AMMAN 2017
  • Articles
  • display
  • Education
  • Others
  • PDF
  • Politics
  • Science
  • Sports
  • sri Muthumari Amman 2025
  • tamil fonts
  • Tech
  • Uncategorized
  • Valvai Libraries
  • Valvai Marine
  • Valvai Schools
  • Valvai Sports Club
  • Valvai Temples
  • VEDA கல்வி நிலையம்
  • VIDEO
  • அறிவித்தல்கள்
  • அறிவியல்
  • ஆன்மிகம்
  • கட்டுரைகள்
  • கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • கலைப்படைப்புகள்
  • கல்வி
  • கவிதைகள்
  • காணொளி
  • குழந்தைகள் பக்கம்
  • கோடை விழா 2013
  • கோடை விழா 2014
  • கோடைவிழா 2015
  • கோவில்கள் – திருவிழா
  • சிதம்பர கணிதப்போட்டி
  • சிறப்பு செய்திகள்
  • சிவன் கோவில் திருவிழா 2017
  • செய்திகள்
  • தாயக செய்திகள்
  • தொழிநுட்பம்
  • நலன்புரிச்சங்கம்
  • நலம்புரிச் சங்கங்கள்
  • நிகழ்வுகள்
  • நிழற்படங்கள்
  • பிரித்தானியா
  • பிரித்தானியா செய்திகள்
  • மரண அறிவித்தல்
  • மருத்துவம்
  • முக்கிய செய்திகள்
  • வல்வை ஒன்றுகூடல் 2013
  • வல்வை கோடைவிழா 2012
  • வல்வை செய்திகள்
  • வல்வை புளூஸ்
  • வல்வை வரலாறு
  • விந்தை உலகம்
  • விளம்பரம்
  • விளையாட்டு செய்திகள்
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2013
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2014
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2015
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா காணொளிகள் 2014

Site Links

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
  • About
  • Advertise
  • Careers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.