வல்வை செய்திகள்

வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

  தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர்  திரு . இரா . ஸ்ரீ நடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ் இல்லமெய்வன்மைப் போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு .அமிர்தலிங்கம் இராசகுமாரன் (தலைவர், ஆங்கில மொழி கற்கை நிலையம், யாழ் பல்கலைக்கழகம் ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
இல்லமெய்வன்மைப் போட்டி தொடர்பாக பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், பா.அ.சங்கம், ப.மா. சங்கம், மற்றும் பா.மே. குழு  ஒன்றாக இணைந்து வெளியிட்டுள்ள அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *