யாழ்ப்பாணம் – மணற்காட்டுப் பகுதியில் நேற்று (28.08.2026) விஷமிகளால் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் தீ, இன்று சனிக்கிழமை (29.08.2026) இரண்டாவது நாளாகவும் கட்டுக்கடங்காத நிலையில் தொடர்ந்து பரவி வருகிறது.
தீயின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலங்கு வானூர்தியும் (ஹெலிகொப்டர்) களமிறக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் உலங்கு வானூர்தி மூலம் வானிலிருந்து நீர் பாய்ச்சப்பட்டு தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், தீப் பரவலை இதுவரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து தீயணைப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.










