Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home செய்திகள்

தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர்

by admin
19/12/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சித்தாண்டி, வந்தாறுமூலை, ஐயங்கேணி, தளவாய், ஏறாவூர்,கொம்மாதுறை, வந்தாறுமூலை,முறக்கொட்டாஞ்சேனை, தேவாபுரம், கோப்பாவெளி, ஈரளக்குளம், பெரியவட்டவான், பூலாக்காடு, பொண்டுகள்சேனை, இலுக்கு, சந்திவெளி, கிரான், பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்கள், மயிலவட்டவான், வேப்பவட்டுவான், செங்கலடியில் அமைந்துள்ள கிராமங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 154 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 34753 குடும்பத்தைச் சேர்ந்த 135464 நபர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு காரியாலயம் தெரிவிக்கின்றது.

வெள்ளத்தால் 154 வீடுகள் முழுச் சேதத்தையும், 607 வீடுகள் பகுதிச் சேதத்தையும் அடைந்துள்ளது. இவ்வனர்த்தத்தின் மூலம் இடம்பெயர்ந்த மக்கள் 17 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வேப்பவட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயம்,சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம்,மயிலவட்டவான் வித்தியாலயம்,வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம்,சித்தாண்டி மகா வித்தியாலயம்,சித்தாண்டி சமுர்த்தி கட்டடம்,சித்தாண்டி இராமகிருஷ்ணா வித்தியாலயம், ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,பெரியவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கொண்டுகள்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உட்பட பல இடங்கள் முக்கிய இடைத்தங்கல் முகாமாக உள்ளது.

இவ்வேளை, மயிலவட்டவானின் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இருவர் இறந்ததுடன் ஒருவர் சார்பாக இதுவரை தகவல் இல்லை. பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியமையின் காரணமாக வாகனப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் பல சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்ட மயிலவெட்டுவான் கிராமத்தில் நேற்றிரவு தொடக்கம் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்த 103பேர் இன்று காலை படகுகளை அனுப்பி மீட்கப்பட்டதாக பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் பிரதேச சபை மற்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 13 முகாம்களில் 1098 குடும்பங்களைச் சேர்ந்த 4400 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய சேத விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





Share this on WhatsApp
admin

admin

Related Posts

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

by சேரன்
26/08/2026
0

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் செயற்பாடுகள் நிதி பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் நிறுத்தப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட...

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

by சேரன்
23/08/2026
0

தெற்காசியாவில் பொதுமக்களால் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை உருவெடுத்துள்ளதாக Pew Research Center மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

by சேரன்
21/08/2026
0

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

by சேரன்
20/08/2026
0

இலங்கை தற்போது பல தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு தீவிரமான எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்...

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

by சேரன்
18/08/2026
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. டொக்டர்...

Next Post

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிளி -ஜெயபுரம் மக்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

21/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.