வல்வை செய்திகள்

31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும். அமரர்_பாலகிருஸ்ணசாமி_செல்வரஞ்சிதம்

31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும்.

அமரர்_பாலகிருஸ்ணசாமி_செல்வரஞ்சிதம்

கடந்த 02.05.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத்தலைவியின் அந்தியேட்டி கிரியைகள் 01.06.2019 சனிக்கிழமை அன்று அதிகாலை 05.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஊறணி தீர்த்த சமுத்திரத்தில் அஸ்தி கரைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 11.00 மணியளவில் மதியபோசனமும் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

02.05.2019 அன்று எமது தெய்வத்தின் மரண செய்தி கேட்டு எமக்கு நேரில் வருகை தந்தும், தொலைபேசி, முகநூல் வாயிலாகவும் அஞ்சலி செலுத்திய அன்பு உள்ளங்கள், நண்பர்களுக்கும் எமக்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த உள்ளங்களுக்கும், எமது குடும்ப சார்பாக நன்றி தெரிவிக்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

அ.மி.பாடசாலை ஒழுங்கை,
கொண்டல்கட்டை,
வல்வெட்டித்துறை

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *