மரண அறிவித்தல் திருமதி .தெய்வாம்பிகை சண்முகரத்தினம் 
பிறப்பு 29.12.1977 இறப்பு 23.07.2019 திருமதி . தெய்வாம்பிகை சண்முகரத்தினம் (வைத்தியகலாநிதி _ தெல்லிப்பளை அரசினர் ஆதார வைத்தியசாலை) தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும் யாழ் k.k.s வீதி சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி .தெய்வாம்பிகை சண்முகரத்தினம் 23.07.2019 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.
அன்னார் தொண்டமனாற்றை சேர்ந்த சாந்தரத்தினம் தெய்வேந்திரம் (ஓய்வூதியர்) _ காலஞ்சென்ற விமலாசிரி( ஓய்வுபெற்ற அதிபர் _ இடைக்காடு மகா வித்தியாலயம்) தம்பதியின் புதல்வியும் ,விஷ்ணுதாசனின் (இலண்டன்) சகோதரியும்,வல்வெட்டித்துறை சேவையர் அம்பிகைபாகர் குலோத்துங்கத்தின் மருமகளும் , பருத்துறையைச் சேர்ந்த இரத்தினம் இந்திரலிங்கம் _ பத்மாவதி தம்பதியின் மருமகளும் ,சண்முகரத்தினத்தின் அன்பு மனைவியும் ,குபேரன்,லாவண்யா ஆகியோரின் அன்புத்தாயாரும் ,பங்கையர்செல்வியின்(இலண்டன்) மைத்துனியும் பைரவி,பிரணவி ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.07.2019) வியாழக்கிழமை அன்று நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 4.00 மணியளவில் ஆறுகால் மடத்து கோம்பயன் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
465/A,
K.K.S வீதி,
யாழ்பபாணம்.
(நீலாம்பரி ஹொட்டல் எதிர் ஒழுங்கை)
T.P 0778928361









