பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் வல்வை மகளிர் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைக்க நலன் புரிச்சங்கத்தினால் ரூபா 300 000.00 அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில் வல்வை மகளிர் பாடசாலையில் ஒரு துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் இல்லாமையினாலும் அதன் அவசியத்தன்மையையும் கருத்தில் கொண்டு நலன் புரிச்சங்கத்தினால் ரூபா 300 000.00 அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நன்றிக்கடிதமும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம். ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும். மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் வல்வை மக்களாகிய நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.











