வல்வை செய்திகள்

ஈழத்தில் 2009 ன் பின் மிகவும் எழுச்சியுடன் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் 27.11.2017 உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தேசிய மாவீரர் நாள்

ஈழத்தில் 2009 ன் பின் மிகவும் எழுச்சியுடன் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் 27.11.2017 உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தேசிய மாவீரர் நாள்

பிரதான ஈகைசுடரினை கிண்ணி அம்மா ஏற்றி வைத்தார் இவர் இரண்டு மாவீரர்களுடைய தாய்.இவர் தான் பெறாத பல ஆயிரக்கணக்கான  போராளிகளையும் வளர்த்ததெடுத்த பெருமைக்குரியவர்.இவர் தனது மகனின் பெயரினாலே செல்லமாக இன்றும் அழைக்கப்படுகின்றார் அது மட்டுமா சொல்லப்போனால் இவர்  ஒரு போராளியாக செயற்பட்டவர் ஆவார்

எண்ணாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்த தீருவில் சதுக்கத்தில் பேரெழுச்சியுடன் மாவீரர் நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது. வடமராட்சிப் பகுதியில் மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்துவதற்காக தீருவில் குமரப்பா புலேந்திரன் நினைவுச் சதுக்கத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. தீருவில் சதுக்கம் மாவீரர் நிகழ்வுகளுகாக மஞ்சள்  சிவப்பு  கொடிகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுடிருந்தது.

மாலை 3 மணி முதல் மாவீரர் நிகழ்விடங்களை நோக்கி மக்கள் ஆயிரக்கணக்காக வந்த வண்ணமிருந்தனர்

சரியாக 6. 05  மணிக்கு  நினைவிடத்தில் அமைதி நிலவ மாவீரர் நினைவுப்பாடல் காதிலே ஒலிங்க முதலாவது ஈகைச்சுடரினை மாவீரர் மேஜர் கிண்ணியின் தாயார் ஏற்ற தொடர்ந்து அங்கே விசேடமாக வைக்கப்பட்ட தீப்பந்தங்களை மாவீரர்களின் பெற்றோர்கள்  உறவினர்கள் ஏற்றி வைத்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

இறுதியில் மாவீரர் நினைவாக தென்னை, எலுமிச்சைக்கன்று  போன்ற பயன்தரு மரக்கன்றுகள் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *