வல்வெட்டித்துறை வீராங்கனை இராமகிருஸ்ணன் தசாந்தினியின் சாதனை. பளுதூக்கலில் முதலாமிடம்.
வல்வெட்டித்துறை வீராங்கனை இராமகிருஸ்ணன் தசாந்தினியின் சாதனை. பளுதூக்கலில் முதலாமிடம்.
அகில இலங்கை பல்கலைகழகங்களுக்கிடையிலான பளுதூக்குதல் போட்டி தொடர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதில் யாழ் பல்கலைக்கழகம் சார்பாக போட்டிகளில் பங்குபற்றிய வல்வெட்டித்துறை வீராங்கனை தசாந்தினி முதலாமிடத்தினை பெற்று அசத்தியுள்ளார்.
அத்துடன் ஒரு 1ம் இடம்(தசாந்தினி) நான்கு 2ம் இடம் இரண்டு 3ம் இடங்களை பெற்று யாழ் பல்கலைக்கழகம் 19 புள்ளிகளுடன்மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
சப்ரகமுவா மற்றும் ஸ்ரீஜெயவர்த்தன பல்கலைக்கழகங்கள் 21 புள்ளிகளுடன் இணைச்சம்பியனாகின.












