வல்வை செய்திகள்

PCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறது? எப்படி செய்யப்படுகிறது? அதன் நன்மை என்ன?

பொதுமக்களின் தெளிவுக்காக..

PCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறது?
எப்படி செய்யப்படுகிறது? அதன் நன்மை என்ன?

மெல்லிய துரும்பு போன்ற குச்சி ஒன்றின் நுனியில் பஞ்சு உருளை வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஒன்றினால் உங்களது தொண்டையிலும் மூக்குத் துவாரத்திலும் இரண்டு குச்சிகளை தொட்டு எடுப்பது மாத்திரமே..
இது உங்களுக்கு எந்த வலியையும் தராது.
இவ்வாறு மிகவும் சுலபமான முறையில் எடுக்கப்பட்ட மாதிரியை கண்ணாடி குழாயில் இட்டு ஐஸ்கட்டிகள் இடப்பட்டு குளிரான முறையில் அனுப்பி வைக்கப்பட்டு Polymerase chain reaction தொழில்நுட்பம் மூலம் Covid 19 எனும் corona வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பரிசோதனையாகும்..

இப் பரிசோதனைக்காக நீங்கள் யாரும் பயப்படத் தேவையில்லை..

முற்கூட்டியே கண்டறிவதன் மூலம் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் உயிர் ஆபத்துகளையும் தவிர்க்க முடியும்..

பரிசோதனைக்கு முன்வருவோம் ..
சமூகப் பரவலை தடுப்போம்.. சுகமாக வாழ்வோம்..

நன்றி
இலங்கை தாதியர் செய்தி குழுமம்
அமுதன்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *