வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் திரு செல்வகுரு உமாசுதன் (பரடைஸ் உமாண்ணா )

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வகுரு உமாசுதன்(பரடைஸ் உமாண்ணா) அவர்கள் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் செல்வகுரு இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சின்னத்தம்பி(கண்மணியப்பா) புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பகவதி(பவாணி) அவர்களின் அன்புக்கணவரும்,

ரதி அவர்களின் அன்புத் தந்தையும்,

பார்த்தசாரதியின்(சாரதி)) பாசமிகு மாமனும்,

ஆரண்யன், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலம்சென்ற தையல்பாகர் சிவசெல்வம் தம்பதிகளின் பேரனும்,

காலம்சென்ற அன்புயம், காலம்சென்ற தேவராஜன் ஆகியோரின் சகோதரனும்,

காசிவிசாலாட்சி, காலம்சென்ற சோமசுந்தரம்(சோமண்ணா) காலம்சென்ற விநாயகசுந்தரம்(சுந்தரி) பர்வதார்த்தனி, அருணாசலம், குழந்தைவேற்பிள்ளை, தனலட்சுமி, இராசலெட்சுமி, செல்வசபாபதிப்பிள்ளை(செல்லப்பு அண்ணா) ஆகியோரின் மைத்துனனும்,

காலம்சென்ற இளையபெருமாள், மனோரஞ்சிதம், காலம்சென்ற சந்திரலிங்கம், காலம்சென்ற ஞானலட்சுமி, மதனலோசனி, கோபிநாதன், ஆகியோரின் சகலனும்,

சிவரூபன், சிவநந்தினி, சிவராகவன், சிவரஞ்சனி, ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறுதிக்கிரியைகள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்-:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு-:

‭பவுண்(மருமகன்)
00 94 (77) 975 1668‬

பகவதி(பாவாணி -மனைவி)
00 94 (77) 970 3701
whatsaap, viber