காணாமல்போனோருக்கு
நீதி கோரி வட மாகாணம்
நாளை முற்றாக முடங்கும்
பூரண ஹர்த்தாலுக்கு சகல தரப்பினரும் முழு ஆதரவு; கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை திங்கட்கிழமை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாது என்பதுடன், அலுவலகங்கள், பாடசாலைகளும் முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்து










