வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மகிடாசூரன் தேவியியுடன் போர்
நவராத்திரி விழாவின் இறுதி இன்று பிற்பகல் 0430 மணிக்கு மகிடாசூரவததிற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் நோக்கி போர் இடம்பெற்றது மகிடாசூரன் பல மாயஜால வித்தைகள் காட்டி போர் நடைபெற்றது இதில் மகிடாசூரன் இறவாத வரம் பெற்றமையினால் வேறு வேறு வடிவங்களில் வந்து தேவியுடன் போர் புரிந்தார் தேவி அத்தனை வேடத்தினையும் பொய்தெறிந்தார் பி;ன தேவியுடன் போர் புரிவது கடினம் என்று தெரிந்து கொண்ட மகிடாசூரன் கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்து கொண்டான் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அவனை சங்கரிப்பதற்காக நளைய தினம் ஓடும் வலு கொண்ட குதிரை வாகனத்தில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்து கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்திருந்த மகிடாசூரனை சங்கரித்துக் கொள்கிறாள் இதுவே மானம்பூ என்ற அழைக்கப்படுகிறது 22.10.2015 பிற்பகல் 0430 மணிக்கு மகிடாசூரவததிற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் நோக்கி செல்வார். 22.10.2015 காலை பூஜை முடிந்த பிற்பாடு ஏடு தொடக்கும் விழாவும் இடம் பெறும்










































































































































