வல்வை நகர சபை 3ம் வட்டார ரீதியான அபிவிருத்திக்கான முன் தெரிவு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
வல்வை நகர சபை வட்டார ரீதியான அபிவிருத்திக்கான முன் தெரிவு கூட்டம் பரவலாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று 3ம் வட்டாரத்திற்கான கூட்டம் வல்வை நகர சபை பொது மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இவ்வாழ் மக்களிடம் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகளையும் கேட்டறிந்தும்,மக்களினாலே முதன்மையான அபிவிருத்தி தெரிவு செய்யப்பட்டிருந்து.
மக்கள் தெரிவு செய்வதனால் தங்கள் தங்கள் பகுதிகளுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர்.
ஆகையால் இனிவரும் பொதுக்கூட்டம் அனைத்து மக்களும் தவராது கலந்து உங்கள் பிரதேச அபிவிருத்தியின் ஆக்கத்திற்கு பங்களியுங்கள்.















