பளுதூக்கலில் அகில இலங்கை ரீதியில் வரலாறு படைத்த வல்வை வீரமங்கை தசாந்தினி 


அகில இலங்கை ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் பளுதூக்குதல் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகம் சார்பில் போட்டியிட்ட வல்வை வி.கழக வீராங்கனை இ.தசாந்தினி முதலிடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.
பளுதூக்குதலில் பல சாதனைகளை புரிந்து வரும் நம் வீராங்கனையால் எமக்கு அல்லாமல் வல்வை மண்ணுக்கும் அது மட்டுமல்லாமல் தமிழ் மண்ணுக்குமே பெருமை என கூறுவதில் பெருமையடைகின்றோம்.
சாதனைகளை படைத்த தசாந்தினிக்கு வல்வை மக்கள் சார்பாக நலன்புரிச்சங்கம்,vvtuk.com இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.









