பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இரவு 10.30 மணியளவில்தி டீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.
திடீரென்று வெடிசத்தம் கேட்டதால் பதறிய மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் ஓடியதால், அனைவரும் முட்டி மோதி ஓடியுள்ளனர்.
இந்த வெடி விபத்து காரணமாக 22 பேர் உயிரிழந்திருப்பதுடன், 59க்கும் மேற்பட்டோர்ருக்கு இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. தகவல்கள் தெரிவிக்கின்றன.