வடகொரிய அச்சுறுத்தலக்ளை எதர்கொள்ளத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தற்பாதுகாப்பு அடிப்படையிலும், நேச நாடான தென் கொரியாவை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அண்மைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மீதோ அல்லது தென் கொரியா மீதோ வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் பாதுகாப்பு நோக்கில் பதில் தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அணுத் திட்டத்தை ஆரம்பிக்கும் வடகொரியாவின் நடவடிக்கையானது ஆத்திரமூட்டும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.