இலங்கைக்கு இன்று 4 நாள் பயணமாக இந்திய இராணுவ தளபதி பிக்ரம்சிங் விஜயம் செய்கிறார்.
இலங்கை வரும் இந்திய இராணுவ தளபதி,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேசவுள்ளார்.
அத்துடன் முக்கிய தலைவர்களை, இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.
அப்போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.