Search

கப்பலை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணையை

மலேஷிய கொடி தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பலில் வேலை செய்த 15 பேரின் சார்பில் கனகசபை பூபாலசிங்கம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கப்பலின் உரிமையாளர்கள் தற்போதைய ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்கவும் மனுதாரர்களின் சம்பளத்தை வழங்காமல், கப்பலை இலங்கையின் நியாயாதிக்கத்துக்கு அப்பால் கொண்டுசெல்லவும் ஆயத்தம் செய்வதாக மனுதாரர்களின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்ததுடன் இந்த கப்பலை கைது செய்ய ஆணை பிறப்பிக்குமாறு அவர் கேட்டுகொண்டார்.

மனுதாரர்களின் வழக்குரைஞரின் வாதங்களை கேட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி ஜயதிலக கப்பலை கைது செய்வதற்கான பிடியானையை பிறப்பித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *