நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலைக்கட்டடப்பணிகள் தற்போது நிறைவுக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
நெடியகாடு அபிவிருத்திச் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் நெடியகாடு அபிவிருத்திச் சபையின் பெரும் நிதி அனுசரணை மற்றும் புலம்பெயர் நாடகளில் வாழும் கணபதி படிப்பக அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கணபதி பாலர் பாடசாலை பழைய மாணவர்களதும் நிதிப் பங்களிப்புடன் பாலர்பாடசாலைக் கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபமும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கட்டட வேலைகளை விரைவாக முன்னெடுத்து கட்டடத்தினை திறப்பதற்கு ஏதுவாக கணபதி படிப்பக அங்கத்தவர்கள , நலன்விரும்பிகள் மற்றும் பாலர் பாடசாலை பழைய மாணவர்கள் ஆகியோரிடமிருந்து நிதி அனுசரணைகள் வேண்டடப்படுகின்றது.