வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட போட்டியில் வல்வை மகளிர் மகா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் 18,20 வயதுப்பிரிவினர் 02ஆம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.
வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையே இன்று (17.06.2022) நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டியில் 18 வயதுப்பிரிவினர் முதல் போட்டியில் மெதடிஸ் பெண்கள் பாடசாலை அணியினரை வீழ்த்தி இறுதிப்போட்டியில் உடுப்பிட்டி மகளிர் அணியுடன் மோதி 2 ஆம் இடத்தினையும்
20 வயதுப்பிரிவு
முதல் போட்டியில் விக்னேஸ்வராக்கல்லூரி அணியினரை வீழ்த்தி இறுதிப்போட்டியில் மெதடிஸ் அணியுடன் மோதி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.