சிதம்பரா நலன்புரி வலையமைப்பினரால் நடாத்தப்பட்ட கணிதப்போட்டி 2014, இன்று ( 14.06.2014) பிரித்தானியாவில் 15 நிலையங்களிலும், பரீட்சாத்தமாக வல்வையில் சிதம்பரா கல்லூரியிலும் ,சிவகுரு வித்தியாசாலையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரித்தானியாவில் நடைபெற்ற கணிதப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு தேர்வை ஆர்வத்துடன் எழுதியதை அனைத்து நிலையங்களிலும் காணக் கூடியதாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இவ் கணிதப் போட்டி பல நிலையங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு வருவதுடன் பங்கு கொள்ளும் மாணவர்களினது எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.





























Leave a Reply