வட ஆளுனர் கிண்ணச்சுற்றுப்போட்டியின் பருத்தித்துறை லீக்கிற்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான தெரிவுப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றுள்ளது. முதல் போட்டி 4.00பி.ப மணிக்கு அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் மோதியது. இதில் வல்வை விளையாட்டு கழகம் 1 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.