Search

வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் மெலிஞ்சிமுனை இருதயராஜா, கொலின்ஸ் விளையாட்டுக்கழகங்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 04.03.2020

வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் மெலிஞ்சிமுனை இருதயராஜா, கொலின்ஸ்
விளையாட்டுக்கழகங்கள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 04.03.2020

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில்.முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.

வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின்
இன்றைய முதலாவது ஆட்டத்தில் 4 மணிக்கு சென்ஜோசப் (மடு) எதிர் மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக் கழகம் மோத இருந்த வேளை சென்ஜோசப் (மடு)வருகை தரமையினால் மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.க வெற்றி வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் 5.00 மணிக்கு நசரேத் எதிர் கொலின்ஸ் மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இவ்விரு விளையாட்டுக்கழகமும் தலா 01.01 என்ற அடிப்படையில் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.வெற்றி தீர்மானிக்கும் பொருட்டு நடுவரினால் தண்டா உதை வழங்கப்பட்டு கொலின்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

ஆட்ட நாயக கொலின்ஸ் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *