சிதம்பராக்கல்லூரி

ஈழத்தின் வரலாற்றுப்பெருமை மிக்க வல்வை மாநகரத்திலே மதிப்பிற்குரிய வள்ளல் பெருந்தகை கு.சிதம்பரப்பிள்ளை அவர்களால் 1896 ஆம் ஆண்டு சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயருடன் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சிதம்பராக்கல்லூரி என்ற பெயரைப் பெற்று, பல தசாப்தங்களைக் கடந்து இன்றும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் பாடசாலையாக திகழ்வதே எமது சிதம்பராக்கல்லூரி ஆகும். வடமராட்சிப் பிரதேசத்தின் தொன்மைமிக்க பாடசாலைகளில் எமது பாடசாலையும் அடங்குவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

‘கல்வியே கண்’ என்னும் உன்னதமான மகுட வாசகத்தைக் கொண்ட ஒர் வரலாற்றுப் புகழ்வாய்ந்த பாடசாலையாக எமது பாடசாலை திகழ்ந்து கொண்டிருக்கிறது.எமது கல்லூரி மாணவர்கள் கல்வியில் மாத்திரமன்றி விளையாட்டுத்துறை, சாரணீயம், நாடகம், சங்கீதம், பொருட்காட்சி, சாகசங்கள் போன்ற பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்

Leave a Reply

Your email address will not be published.