வல்வை செய்திகள்

வல்வை விளையாட்டுக் கழகம், 06:00 என்ற கோல்க் கணக்கில் வெற்றி

மணற்காடு சென் அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம், வட மாகாண ரீதியாக, அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தும் 09 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில், தமது முதல் போட்டியில் கிளிநொச்சி திருநகர் விளையாட்டுக் கழகத்தினை எதிர் கொண்ட எமது வல்வை விளையாட்டுக் கழகம், 06:00 என்ற கோல்க் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

வல்வை அணி சார்பாக ரசிகரன், சஞ்சீபன் மற்றும் பிசாந் ஆகியோர் தலா இவ்விரண்டு கோல்களை போட்டனர்.

ஆட்ட நாயகனாக ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *