வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(02.07.2019) நண்பகல் 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன.