தொழிநுட்பம்

மனித உடலில் புதிய பகுதியைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Harminder Dua என பெயரிடப்பட்டுள்ள இப்பகுதியானது மனிதக் கண்ணிலேயே காணப்படுகின்றது. அதாவது கண்களில் காணப்படும் படைகளில் ஒன்றாக அமைந்துள்ள இப்புதிய பகுதி கருவிழியில் முன்னர் அறியப்பட்ட 5 படைகளுடன் சேர்த்து ஆறாவது படையாக (Layer) கருதப்படுகின்றது.

இப்புதிய கண்டுபிடிப்பானது கருவிழியில் கோளாறு உள்ளவர்கள் மற்றும் ஏனைய பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவதை எதிர்காலத்தில் இலகுவாக்கும் என குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *