தமிழீழஅன்னை வேலுப்பிள்ளை பார்வதிஅம்மாவின் முதலாம்ஆண்டுநினைவு!

அத்தனை தமிழர்
ஆறுகோடி பேருக்கும் -ஒரு
ஒற்றை முகவரியை உலகுக்கு தந்தவள் நீ
எத்தனை ஆண்டுகள் கடந்துபோயினும்
உன் நினைவு கரைந்து போகாது காண்.
எங்களுக்கான ஒரு சூரியனை தந்தவள் நீ.
அந்த வெளிச்சத்தில்தானே இன்னும்
உயிர் வாழ்கிறது இந்த இனம்.
நீ கருவில் சுமந்து பெற்று
தவளவிட்டு நடை பழக்கிய
மைந்தன்தான் இந்த இனத்தை
வீரமுடன் போரடவும்
விடுதலைக்காய் உயிர் தரவும்
தலைநிமிர்ந்து நடையிடவும்
சொல்லி தந்தவன்.
தலைவனை,எங்கள் வாழ்விற்கு சுதந்திரவெளிச்சம் தர போராடும் ஒரு உன்னதவீரனை தந்த இந்த தாய் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கவர்.
கூனியும் குறுகியும் கிடந்த இனத்தினை நிமிர்த்திய அண்ணையை தந்த அன்னையே வணங்குகின்றோம்.







