வல்வை உதை-இன்றைய ஆட்டத்தில் கரவைசுடர் விளையாட்டுக்கழகம் தண்ட உதையில் 4.2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 22.02.2020
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.
வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இன்றைய ஆட்டத்தில் பொற்பதி சென்பீற்றர்ஸ் அணியினை எதிர்த்து கரவைசுடர் அணியானது மோதியது
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இவ்விருவிளையாட்டுக்கழகம் 2:2 என்ற கோல்கணக்கில் சமனிலை அடைய வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவர்களால் வழங்கப்படட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 4:2 என்ற கோல்கணக்கில் கரவைசுடர் அணியானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.
ஆட்ட நாயகனாக கரவைசுடர் றொபின்சன் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.














































Leave a Reply