மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி – அட்டவணை அறிவிப்பு

10ஆவது மகளிர் ஆசியக் கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நேபாளில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

‘A’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து அணிகளும், ‘B’ பிரிவில் நடப்பு சம்பியன் இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றான சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இம்முறை தொடரில் ஆசியாவின் முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதவுள்ளதால், போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடப்பு சம்பியனான இலங்கை அணி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கவுள்ளது.

இறுதிப்போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தொடரின் ஒவ்வொரு போட்டியும் அணிகளின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறும்.