31ம் நாள் நினைவு அஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பும், நன்றி நவிலலும்
அமரர் செல்வராஜா சித்திரராஜா
கடந்த 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்ப தலைவரின் அந்தியேட்டி கிரியைகள்
04.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 5.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்( 36 Bond Road, Mitcham, Surrey CR4 3HE ) நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணியளவில் மதிய போசனமும் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நேரில் வருகை தந்தும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்திய அன்பு உள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும், எமக்கு பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த உள்ளங்களுக்கும் எமது குடும்ப சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம்.
இங்ஙனம்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்