உலகின் பல்வேறு நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருந்தாலும் ரஷ்யாவில் ஆனோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழ்வதை அரசு தடை செய்துள்ளது.
அது மட்டுமின்றி, ஓரினச் சேர்க்கை தொடர்பாக வெளிபடையாக பேசுவதோ சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் நேற்று பேரணி நடத்தினர்.
பேரணி நடந்த இடத்திற்கு வந்த சுமார் 200 பழமைவாதிகள் ஓரினச் சேர்க்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாய்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கினர்.
இதில் பலருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்திய போலீசார் இருதரப்பிலும் 67 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.